ஒலி ஒளி இல்லாத
நிச்சலனம்
உயரே உயரே
ஏதுமில்லா அந்தரத்தில்
கட்டி முடித்த கயிறு
கயிற்றின் இருப்பில்
இந்த கூடை ஊஞ்சல்!
நிச்சலனம்
உயரே உயரே
ஏதுமில்லா அந்தரத்தில்
கட்டி முடித்த கயிறு
கயிற்றின் இருப்பில்
இந்த கூடை ஊஞ்சல்!
ஊஞ்சலில் கண்மூடி
அமர்ந்தவாறு
என் கால்கள் விழும்
இடத்தில் மட்டும்
தோன்றி யிருந்த பூமி ...
அமர்ந்தவாறு
என் கால்கள் விழும்
இடத்தில் மட்டும்
தோன்றி யிருந்த பூமி ...
பின் எங்கும் எங்குமாய்.....
எதுவுமில்லா பரவெளி
உள்ளும் புறமும்
சிந்தையில்லை
செயல்களில்லை
மனம் நிறைய
பற்றுபாசம் கடந்த
வெறுமை!
எதுவுமில்லா பரவெளி
உள்ளும் புறமும்
சிந்தையில்லை
செயல்களில்லை
மனம் நிறைய
பற்றுபாசம் கடந்த
வெறுமை!
Comments
Post a Comment